வனவிலங்கு வாரவிழாவை முன்னிட்டு நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு

வனவிலங்கு வாரவிழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான வன விலங்கு வாரவிழாவினை முன்னிட்டு நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வனவிலங்கு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதன் நிறைவு நாளான இன்று நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட் சார்பாக கை வில்லைகள் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.



உதகை தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் கலந்துகொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனம் மற்றும் வனவிலங்கு குறித்த வாசகங்கள் பொறித்த கை வில்லைகளை கட்டினார்.

இந்நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவர் லாரன்ஸ் மற்றும் நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட்டை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...