ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் எழுதிய புத்தகம் இந்திய துணை குடியரசுத் தலைவரால் வெளியீடு

ஜெம் மருத்துவமனை முதன்மை மருத்துவர் சி.பழனிவேலு மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சைத் துறை தலைமை மருத்துவர் பி.பிரவீன்ராஜ் ஆகியோர் எழுதிய புத்தகத்தை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

கோவை ஜெம் மருத்துவமனையின் நிறுவனரான மருத்துவர் சி.பழனிவேலு லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை துறையில் உலகளவில் முன்னோடியாக திகழ்வதோடு மட்டுமல்லாது இத்துறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து உலகளவில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 



இவரது கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமாக கருதப்படுவது நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சையாகும். இவர் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் பல புத்தகங்கள் உலகில் பல மொழிகளில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதனிடையே தற்போது அண்மையில் எழுதப்பட்ட நுண்துளை ஜீரண மண்டல புற்றுநோய் அறுவை சிகிச்சை புத்தகத்தில் அறுவை சிகிச்சை முறையை படிப்படியாக தெளிவாக விளக்கியுள்ளார். இந்த புத்தகமானது உலகளவில் உள்ள இளைய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் மற்றும் மூத்த லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.



ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் பி.பிரவீன்ராஜ் உடல் பருமன் அறுவை சிகிச்சையை முறைப்படுத்த பல உடல்பருமன் தொடர்பான மருத்துவ மாநாடுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார். தற்போது, உடல் பருமன் அறுவை சிகிச்சை வழிகாட்டு புத்தகத்தை எழுதியுள்ளார்.



இந்த புத்தகங்கள் வெளியீட்டு விழா இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் எஸ்.கே.மிஸ்ரா மற்றும் ஏஎஸ்ஐ தலைவர் மருத்துவர் திலீப் கோடே ஆகியோர் தலைமையில் தில்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இல்லத்தில் நடைபெற்றது. இதில் புத்தகங்களை வெளியிட்ட வெங்கையா நாயுடு மருத்துவர்களை பாராட்டினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...