புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக-வில் இணைந்தாரா ?


மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட மக்களை வஞ்சித்து வரும் திட்டங்களை அமல்படுத்தி வருவதாக தமிழக எதிர்க் கட்சித் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இருப்பினும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக அமல்படுத்தும் திட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், கேரளாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் பங்கேற்று விட்டு நேற்று கோவைக்கு வந்தார்.

அவரை தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்தார். அப்போது முரளிதரராவ், கிருஷ்ணசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பிற அரசியல் கட்சியினரிடையே பரபரப்பையும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் பாஜகவில் இணைந்துவிட்டாரா என்ற சந்தேகசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எந்த ஒரு அறிவிப்போ, நிகழ்வோ நடந்தால் அதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பதை வழக்கமாக கொண்டுள்ள கிருஷ்ணசாமி, தற்போது பாஜக தமிழக பொறுப்பாளரை சந்தித்த சம்பவம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்காமல் இருப்பது அரசியல் கட்சியினரிடையே புதிய தமிழகம் கட்சி பாஜகவில் இணைந்து விட்டதா? அல்லது அக்கட்சி முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டு கிருஷ்ணசாமி பாஜக-வில் இணைந்துவிட்டாரா ? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...