மகாகவி பாரதியார் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு



பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் பாரதி பிறந்த தேதியான 11-ம் தேதியினை நினைவு கூறும் வகையில் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி நடைபெற்ற "வையத் தலைமை கொள்” எனும் தலைப்பில் நடைபெற்ற சொற்பொழிவை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். கணபதி தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசுகையில், வரும் டிசம்பர் 11-ம் தேதி பாரதியின் பிறந்தநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ”மகாகவி பாரதியார் வாழ்நாள் சாதனையாளர் விருது” எனும் பெயரில் பாரதியை நினைவு கூறும் வகையில் பாரதியார் குறித்தும், தமிழ்மொழி குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஒரு மூத்த தமிழறிஞருக்கு வழங்கப்பட உள்ளது. 



இதற்கென தனியாக ஒரு குழு அமைத்து விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுவார். மேலும், நமது பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரி மாணவர்களிடையே கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி ஒவ்வொன்றிலும் முதல் 3 இடங்களில் வரும் பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கும், இணைப்புக்கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கும் ஆக 18 மாணவர்களுக்கு ”இளம் பாரதி” விருது வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார். 

தொடர்ந்து,  பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். கணபதி, பாரதி பிறந்தநாள் விழாவில் மாணவர்கள் பங்கேற்கும் கலைவிழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும். என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...