கோவை மாநகராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் கட்டணம் வசூல் குறித்து ஆய்வு

மூன்று வாகனங்கள் நிறுத்தும் இடங்களின் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அபராத தொகை தலா ரூ.20,000 விதிக்கப்பட்டு, கோவை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி உத்தரவின்படி மாநகராட்சி, மத்திய மண்டலத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றதா என்பதை மாநகராட்சி வருவாய் பிரிவினர் ஆய்வு செய்தனர். 

அந்த ஆய்வின் போது மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.81-ல் குரு ஹோட்டல், வார்டு எண்.83-ல் தியாகி குமரன் மார்க்கெட் மற்றும் இராஜவீதி ஆகிய வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் நான்கு சக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரம் நிறுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.10-க்கு பதிலாக கூடுதலாக ரூ.20 பொதுமக்களிடமிருந்து வசூல் செய்வது கண்டறியப்பட்டது.

மேலும், மேற்கண்ட இடங்களில் மாநகராட்சியின் கட்டண அறிவிப்பு பலகையை பொதுமக்கள் பார்வையில் தெரியாதபடி மூடி வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. 

மாநகராட்சி பொது ஏல விதிமுறைகளை மீறி செயல்பட்டமைக்கும், மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியமைக்கும், மேற்கண்ட சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அபராத தொகை தலா ரூ.20,000 விதிக்கப்பட்டு, கோவை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதுமேலும், இக்கடிதம் பெற்ற 3 தினங்களுக்குள் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக கருவூலத்தில் அபராத தொகையினை செலுத்துமாறும், தவறும்பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த ஆணை ரத்து செய்யப்பட்டு தங்களது பெயரினை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு இவ்வினத்தினை பொது ஏலத்தில் சேர்க்கப்படும் என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநகராட்சி மத்திய மண்டலம் (பொ) உதவி ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...