பல வருட போராட்டங்களுக்கு பின் இறுதியாக கோவை சிங்கபூருடன் விமான வழியாக இணைய போகிறது

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து எந்தவித நேரடி சர்வதேச விமான சேவைகளும் இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வந்தது. மேலும், வெளிநாடுகளுக்கு செல்வோர் இணைப்பு விமானத்தை பயன்படுத்துவதற்காக டெல்லி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, வர்த்தகம் செழித்த கொங்கு மண்டலத்தில் இருந்து சர்வதேச விமானசேவை வழங்கப்பட வேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், முதற்கட்டமாக, கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானசேவை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் வனிதா மோகன், கோவை, திருப்பூர், கரூர், நீலகிரி, கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகள் பயன்பெறும் என்றார். 

நவம்பர் 18-ம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் இந்த சேவையை வழங்குகிறது. இந்த அறிவிப்பு கொங்கு மண்டலத்தை சேர்ந்த மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

விமானசேவை நேரம் :

  • விமான எண் 165 : டெல்லியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படும். இரவு 10.00 மணிக்கு கோவை வந்தடையும்.
  • விமான எண் 166 : கோவையில் இருந்து மதியம் 02.05 மணிக்கு புறப்படும். மாலை 05.05 மணிக்கு டெல்லி சென்றடையும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...