நவ.3 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும்- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் வருகிற நவம்பர் 3ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்டு பயணடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் பல்வேலு அரசு துறைகளில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுநாள் வரையிலும் கிடைக்கப்பெறமால் இருப்பின் இதுகுறித்து தங்கள் குறைகள், பணியாற்றிய அரசு துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக ஓய்வூதிய குறை தீர்ப்பு மாதிரிப் படிவத்தில் மனுக்களை இரட்டை பிரதிகளில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு 20.11.2017-க்குள் கிடைக்கும்படியாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்.

இது தொடர்பான ஓய்வூதிய குறைதீர்ப்பு நாள் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற நவம்பர் 3 அன்று வெள்ளிகிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

சென்னை ஓய்வூதிய இயக்குநர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நேர்முகக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓய்வூதிய குறை குறித்து மனு அனுப்ப வேண்டிய மாதிரிப் படிவம்

1. பெயர் மற்றும் முகவரி.

2. பி.பி.ஓ. எண்.

3. ஓய்வு பெற்ற நாள்.

4. கடைசியாக விகித்த பதவி மற்றும் துறை.

5. குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும்.

6. முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம் (சுநகநசநnஉந)

7. இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடாந்திருந்தால் அதன் விவரம்.

8. குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விபரம்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...