உடுமலையில் அரசுப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசுப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேரை பலி கொண்ட கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ள அரசுக்கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாழடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தால், மாணவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், பள்ளி மாணவர்கள் வகுப்பில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தப் பள்ளிக் கூடம் திறக்கப்பட்டு 2 மாதங்களே ஆன நிலையில், இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், எனவே, தரமற்ற இந்தக் கட்டிடத்தை கட்டிய கட்டிட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கையை, அரசு எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 



இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் கூறுகையில், பள்ளிக் கட்டிடத்தை ஒப்பந்தக்காரர் அவசர அவசரமாக கட்டியதால், மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் இடிந்து விழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு பெய்த கனமழையால், வகுப்பறைக்குள் உள்ள மேற்கூரையும் சரிந்து விழுந்தது. இதனால், சில மாணவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

அரசுப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பள்ளிக்கு இன்று (அக்.,13) விடுமுறைப்பட்டதாக பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் விசாரணை நடக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...