வால்பாறை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 20 சதவீதம் போனஸ் கேட்டு அலுவலக முற்றுகைப் போராட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியிம் ஊழியர்கள் 20 சதவீதம் போனஸ் கேட்டு அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 



வால்பாறை அடுத்துள்ள தமிழக அரசுக்கு சொந்தமான சின்கோனா டேன் டீ எஸ்டேட்டில் சுமார் 900-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு, 8.33 போனஸ் மட்டுமே கொடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டேன் டீ எஸ்டேட்டின் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள்  முற்றுகை போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து அறிந்த வால்பாறை தொழிலாளர் ஆணையாளர் முகமது யூசப் தலைமையில் டேன் டீ நிர்வாக மேலாளர் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் முன்னிலையில் டேன் டீ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தமிழக அரசிடம் இருந்து அரசாணை வந்தபின்பு வழங்குவதாக நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளனர்.



இதைத் தொடர்ந்து இன்று (அக்.,14) மாலைக்குள் போனஸ் வழங்கவில்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த ப்போவதாக  தொழிலாளர் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...