சிரியன் ஆலயம் அருகே பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்- பொது மக்கள் அவதி



கோவை மாவட்டம், ஆர்.எஸ். புரத்திற்கு அருகே அமைந்துள்ள சிரியன் சர்ச் பார்க் சாலையில் சாக்கடை குழாயில் சேதம் ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக கழிவு நீர் வெளியேறிவருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

வார்டு எண்: 25, தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிரியன் சர்ச் பகுதியில் இரண்டு சாக்கடைக் குழாய்கள் அமைக்க பட்டுள்ளன . ஒரு குழாயில், அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்புகளிலிருந்து வரும் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் எந்த சேதமுமில்லை. மற்றொரு குழாயில் ஆர்.எஸ். புரம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வரும் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.



இந்த குழாயிலேயே அதிகப்படியான அளவு நீர் வெளியேறுவதால் அடைப்பு ஏற்பட்டு சாலையில் நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடிவருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துன்னர்.

மேலும், "மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளிகள் தொடர்ந்து இந்த குழாயை சரிசெய்ய முயற்சி செய்துவந்தாலும் கடந்த ஏழு நாட்களாக இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இதற்குக் காரணம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து பெருமளவு கழிவுநீர் இந்த குழாய் வழியாக வெளியேற்றுவதே ஆகும்.



இதில், அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை மட்டுமே மேற்குறிப்பிட்ட சாக்கடைக் குழாயில் நீரோட்டம் குறைந்து காணப்படுகிறது. எனவே, அந்த நேரத்தில் மட்டுமே மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளிகள் சாக்கடை குழாய்களுக்குள் இறங்கி அடைப்பை எடுக்க முயன்று வருகின்றனர். பிற நேரங்களில் பெருமளவு கழிவுநீர் வடிவதால் துப்புரவுத் தொழிலாளர்களால் சாக்கடை குழாய்களில் இறங்க முடிவதில்லை.

"பெருகிவரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் வடிகால்கள் வேறு வழியில் மாற்றி அமைக்கப்பட்டால் தான் இந்த பிரச்சனை தீரும்" என்றார் அப்பகுதியில் வசிக்கும் சந்திரன்.

"குறிப்பாக, ஆற்றுநீரைப் போல கழிவுநீரானது சாலையில் அதிகளவில் ஓடிவருவதால் அந்த சாலையினை கடப்பதே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் ஆபத்தாய் மாறிவருகிறது. மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் அருகில் வசிப்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகளவுள்ளது ஏற்பட்டுள்ளது" என்று எச்சரித்தார் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்.

பருவ மழை பெய்யத் தொடங்க யிருக்கும் இந்த சூழலில் மேலும் தாமதிக்காமல் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து இந்த கழிவுநீர் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...