கன மழையால் பாதிக்கப்பட்ட உடுமலை கிராமத்தில் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

உடுமலை, பொன்னேரி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியினை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உடுமலைக்கு உட்பட்ட பொன்னேரி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று (நேற்று) கன மழை பெய்து மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று (ஞாயிறு) அப்பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டார்.



அப்போது, அப்பகுதி மக்கள், கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது மழை பெய்துள்ளதாகவும், இதனால் குடியிருப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் புகார் அளித்தனர்.

தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...