பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு- கோவையில் முடங்கிய கேரள பேருந்து சேவை

கேரளாவில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வைக் கண்டித்து, கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை முதலே கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



இதன் காரணமாக, கோவை மாவட்டம், உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரளாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 28 தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேசமயம் ஒரு சில கேரள அரசு பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை காலத்தில் திடீரென நடத்தப்படும் இதுபோன்ற முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்கள் விடுமுறைக்கு கேரளா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...