ஆர்.வி கல்லூரி மற்றும் பசியாற சோறு அமைப்பு இணைந்து உலக உணவுதினம் அனுசரிப்பு

ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி. ஆர்.வி.ஹோட்டல் மற்றும் பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து உலக உணவுதினத்தை கொண்டாடின.



நாடு முழுவதும் உலக உணவுதினம் இன்று (16.10.2017) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை, ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி. ஆர்.வி.ஹோட்டல் மற்றும் பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனமும் இணைந்துகோவை அரசு மருத்துவமனை அருகே கொண்டாடின.

அரசு மருத்துவமனை அருகே அடிப்படை வசதிகூட இல்லாமல் இருக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கப்பட்டது. 



இது தொடர்பாக ஆர்.வி கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், எங்களது மேலாண்மை ஆண்டுதோறும், ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 45 கிலோ உணவு மற்றும் உணவுப் பொருட்கள் தங்களது ஹோட்டல் மூலமாக, ஆதரவற்ற முதியவர்கள். ஏழை நோயாளிகளுக்கு வழங்கினோம். 

இதேபோல, எங்களது கல்லூரி மாணவர்கள், அவர்களது இல்லங்களில் இருந்து உணவுகளை எடுத்து வந்து, அரசு மருத்துவமனை அருகே உள்ள ஆதரவற்றவர்களுககு வழங்கினர். உணவு வழங்கல் மற்றும் உணவு வீணடிப்பதை தடுக்க வேண்டும் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....