பழைய கடன்களை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு


பழைய கடன்களை ரத்து செய்துவிட்டு புதிய கடன்கள் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருந்தாலும் முறையான கணக்கெடுப்பு நடத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். 



மேலும், ஒரு சில பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு இழமேலும், ஒரு சில பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.

எனவே, வறட்சி நிவாரணம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கடன் பெற்று வறட்சியால் செலுத்த முடியாத விவசாயிகளின் கடனை ரத்து செய்துவிட்டு, இந்த ஆண்டு சாகுபடிக்கான புதிய கடன்கள் வழங்க வேண்டும்.

பயிற்காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து இருப்பதை மாற்றி தேசிய காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....