சிறுபான்மையினர் வழிபாட்டுத் தளம் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

நீலம்பூர் பகுதியில் சிறுபான்மையினருக்கான வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- 

சூலூர் வட்டம், நீலம்பூர் பகுதியில் கிருத்துவ மதத்தினருக்கான ஜெப ஆலயங்கள் செயல்பட்டு வருகின்றன . இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சில நபர்கள் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளில் நாங்கள் மிரட்டி தொகை வசூலிப்பதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும் முறையான நடவடிக்கை இல்லை.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நீலம்பூர் பகுதியில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....