பொய்வழக்கு தொடர்ந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதை வியாபாரி மனு

தனது பணத்தை அபகரித்துக் கொண்டு, தனது மீது பொய் வழக்கு செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபாதை வியாபாரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் நடைபாதை பழவியாபாரம் செய்து வருபவர் காந்தி. இவரது மனைவி ராஜேஸ்வரி 100 அடி சாலையில் பகலில் கம்பங்கூழ் கடையும், மாலையில் இட்லி வியாபாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில், ராஜேஸ்வரியின் இட்லி கடைக்கு சென்ற சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆய்வாளர் ஜெயராஜ், காவலர் கணேசன், எந்த அனுமதியுமின்றி கடை வைத்ததாகக் கூறி காந்தியை இரவு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அனுமதியின்றி கடை வைத்ததால், 75-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தனது மனைவி மற்றும் தாயை வரவழைத்து அபராதத் தொகையான ரூ.1,200 செலுத்திவிட்டு, வியாபாரி காந்தி காவல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், தனது பணத்தை அபகரித்தது மட்டுல்லாமல் பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர்கள் மோகன், பாலகன், ஜெயராஜ் மற்றும் கணேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், தன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும், அபகரித்த பணத்தை திரும்பப்பெறக் கோரியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....