பஞ்சமி நிலங்களை ஏமாற்றி அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

போலி ஆவணங்களை தயார் செய்து பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, விவசாய நிலங்களை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.



அந்த மனுவில், கோவை மாவட்டம், காரமடை பகுதியில் உள்ள குட்டையூர் பகுதியை சேர்ந்த 33 குடும்பங்களுக்கு சுமார் 62 ஏக்கர் அளவுக்கு விவசாயம் செய்ய தங்களது முன்னோர்களுக்கு, பஞ்சமி நிலங்களை ஆங்கிலேயர்கள் வழங்கினர். அந்த இடத்தில் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறோம். 

இந்த நிலையில், காரமடையைச் சேர்ந்த பவுன்புரோக்கர் மகேந்திரகுமார் சேட்டு என்பவர் தங்களுடைய நிலத்தை விற்பனை செய்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்து வைத்துள்ளார். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சமிநிலம் தன்னுடையது எனக் கூறி கிராம மக்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார். 

எங்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்த மகேந்திரகுமார் சேட்டு என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...