நீர்நிலைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஆம்ஆத்மி கட்சி கோரிக்கை


கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ஆம்ஆத்மி கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இது தொடர்பாக அக்கட்சி அளித்துள்ள பொதுநல மனுவில், கோவை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள வாலாங்குளம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் கரை பகுதிகளில் இருமருங்கிலும், இரவு நேரங்களில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும், ஆவின் கடைகள் அமைத்தல்/உணவகங்கள் அமைத்தல் போன்றவை இருப்பதால், குளத்தின் பரப்பளவு குறைந்து வருவதுடன், முறையான தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது.

தற்போது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இதுபோன்ற நோய்கள் அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. எனவே, இது குறித்து களஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், மேலும், குளத்தின் கரை பகுதிகளில் உள்ள ஆக்கரிமிப்புகளை அகற்றுவதோடு, மாவட்டத்தின் அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்க நீர் நிலைகளை சீர் செய்ய வேண்டிகிறோம். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....