வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பு - வனத்துறையினர் அறிவிப்பு

வனவிலங்குகளின் நலன் கருதி வன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தினருக்கு பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, இன்னும் ஒருநாளே உள்ளது. இதனால், அனைவரும் பட்டாசுகளை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினர் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில், வன எல்லைகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  சத்தம் மிகவும் குறைவான வெடிகளை பயன்படுத்தலாம் என்றும்,  வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், தடாகம், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி  மற்றும் காரமடை போன்ற பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கிராம மக்களுடன் வனத்துறையினர் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தீபாவளியன்று வெடிக்கும் பட்டாசுகளால் வனப்பகுதிக்குள் இருக்கும் விலங்குகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, வன எல்லையில் உள்ள கிராமத்தினரை சத்தம் குறைவான பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்துவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....