கேபிஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வந்த என்சிசி முகாம் நிறைவு

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை 11(TN) சிக்னல் கம்பெனி என்சிசி, சேலம் சிஏடிசி ப்ரீ-ஐசிஜி பிரிவினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் கோவை, திருப்பூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்டு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 164 என்சிசி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், அவர்களுக்கு ட்ரில், துப்பாக்கி கையாளுதல் மற்றும் சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. 

கர்னல் எம்.பி.செலஸ்டின் குழு கமான்டராகவும், லெஃப்டினன்ட் கர்னல் வி.கே.கே.பனிக்கர் முகாம் கமான்டராகவும் செயல்பட்டனர்.

இம்முகாமின் இறுதி நாளான இன்று கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே.பொம்மன்ன ராஜன் என்சிசி மாணவர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...