வாலிபரை கொலை செய்த கும்பலை 8 மணி நேரத்தில் கைது செய்த துடியலூர் போலீஸார்


கோவையில் வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளை துடியலூர் போலீஸார் 8 மணி நேரத்தில் கைது செய்தனர். 

ரத்தினபுரி, தில்லைநகரைச் சேர்ந்த சீனிவாசன் (20) என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். இவர், நேற்றிரவு 10 மணியளவில் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில், கொலை நடந்த 8 மணி நேரத்தில், குற்றவாளிகளான ஜீனத்குமார் (30), சூர்யபிரகாஷ் (27), செந்தில்குமார் (30) ஆகிய 3 பேரை ரத்தினப்புரி பகுதியில் உள்ள நாராயணசாமி லே அவுட்டில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். 

இந்தக் கைது நடவடிக்கை குறித்து போலீஸார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சீனிவாசன் மற்றும் கொலையாளிகள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாவர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான விக்கி என்பவர் ஜீனத்குமாருடன் சண்டையிட்டு மாயமாகியுள்ளார். இதனால், விக்கி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துக் கூறுமாறு சீனிவாசனிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

 பின்னர், ஜீனத்குமார், சூர்யபிரகாஷ் , செந்தில்குமார் ஆகியோருடன் சீனிவாசன், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள விக்கியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். அங்கு விக்கி, வீட்டில் இருக்கிறாரா..? எனப் பார்த்து வருமாறு சீனிவாசனிடம் மூவரும் கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், கத்தி மற்றும் கற்களை கொண்டு தாக்கி சீனிவாசனை கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....