கோவையில் டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை - அமைச்சரின் பேச்சால் குழப்பம்



டெங்கு காய்ச்சலுக்கு கோவையில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 



கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுனன், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறுகளை பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார். 

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  தமிழக அரசு வேகமாக செயல்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், டெங்கு பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதுவரை கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பே ஏற்படவில்லை. உயிரிழப்புகள் இல்லாததால் கோவையில் ஆய்வு செய்ய மத்திய குழு வரவில்லை. தண்ணீரை மாற்றி குடித்தால் காய்ச்சல் வருகிறது. டெங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த இரு மாதங்களில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,  அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...