தினக்கூலி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்


2016-17 ஆண்டுக்கான முறைப்படியான போனஸ், சட்டப்படியான சம்பளம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்தப்பணியாளர், ஓட்டுநர், கிளீனர் கோயமுத்தூர் லேபர் யூனியன், தமிழநாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு & பொதுப்பணியாளர் சங்கம் மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா போன்ற அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.



இதுகுறித்து பேசிய ஜனசக்தி மஸ்தூர் சபாவின் தலைவர் பழனிவேல் கூறியதாவது, "முறைப்படியான போனஸ், சட்டப்படியான சம்பளம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (அக்.,19) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது திடீரென்று நடத்தப்படும் போராட்டம் அல்ல. சம்பள பிரச்சனை குறித்து பல முறை மனு கொடுத்தும் முறையான பதில் தரப்படவில்லை. இந்தநிலையில், மாநகராட்சி சார்பாக வெறும் ரூ.500, ரூ.1000 போனஸாக கொடுக்கப்பட்டது. இது சட்டப்படியான போனஸ் இல்லை. முறையான தொகை வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.



தீபாவளிப் பண்டிகை நேற்று முடிந்த நிலையில், தெருக்களில் குப்பைகள் நிறைந்துள்ளன. இந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகள் அகற்றுப்படுவதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...