ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு : இரண்டாயிரத்து ஐநூறு பேர் பங்கேற்பு


கோவையில் நடைபெற்ற 110-வது பட்டாலியன் ராணுவப் படையில் சேருவதற்கான ஆள்சேர்ப்பு முகாமில் 2500 பேர் கலந்து கொண்டனர். 



110-வது பட்டாலியன் ராணுவப் படையில் 8 ராணுவ படை வீரர்களுக்கும், 3 துப்புரவுப் பணியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கோவை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது.



இன்று (அக்.,23) காலை தொடங்கிய இந்த முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 2,500 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, உயரம், மார்பளவு உள்ளிட்ட உடல் தகுதித்திறன் தேர்வு நடைபெற்றது. 11 பேருக்கான காலியிடங்கள் மட்டுமே உள்ள பணிக்கு ஏராளமானோர் பங்கேற்றிருப்பது ராணுவத்தில் பணியாற்றுவதன் ஆர்வம் இளைஞர்களிடையே அதிகரித்திருப்பதை வெளிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...