கோவையில் இருந்து திருச்சிக்கு மாறுகிறது மத்திய கலால்துறை அலுவலகம்

கடந்த 55 ஆண்டுகளாக கோவையில் செயல்பட்டு வந்த மத்திய கலால்துறை அலுவலகத்தை திருச்சிக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

கடந்த 1962 -ம் ஆண்டு முதல் கோவையில் மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், ஜி.எஸ்.டி வரி மற்றும் சுங்கத்துறையும் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலால்துறை அலுவலகத்தை திருச்சிக்கு இடமாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

வரும் 31-ம் தேதி வரை கோவையில் செயல்படும், மத்திய அரசின் கலால்துறை அலுவலகம், நவம்பர் 1-ம் தேதி முதல் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்பட இருக்கிறது.  எஞ்சிய சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவுகள் கோவையிலேயே செயல்பட உள்ளது. 

இது தொடர்பாக, கோவை சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாசராவ் பேசுகையில், ”கோவையில் வரும் 31-ம் தேதி வரை மட்டுமே, சுங்கத்துறை அலுவலகம் செயல்படும்.  மத்திய சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவுகள் தற்போதைய அலுவலகத்திலேயே இயங்கும்.” இவ்வாறு அவர் கூறினார். 

கோவையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தில், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், வெளி அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...