பணம் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் மிரட்டுவோர் மீது நடவடிக்கை கோரி மனு

பணம் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் மிரட்டுவதாகக் கூறி பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மனைவி மணிபிரியா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பவருக்கு இடம் விற்ற பணம் 4 லட்சம் ரூபாயை கைமாறாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் திரும்பக் கேட்ட போது திலகவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்ததாகவும், குண்டர்கள் சிலரை வைத்து கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் மற்றும் மிரட்டல் விடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனது குழந்தைகள் மூவருடன் வந்து மனு அளித்தார்.

கந்து வட்டி விவகாரத்தில் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...