நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த 4 பேரும் பலி - அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்


நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது.

நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் அருகில் உள்ள காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி மற்றும் 2 மகள்களுடன் கடந்த திங்கட்கிழமை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளித்தனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கந்து வட்டிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தவறிய மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகளை மாற்றக்கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், கந்துவட்டி கொடுத்தவர்களின் கொடுமை மற்றும் போலீஸ் நடவடிக்கை எடுக்காமை காரணமாக 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பதில் அளிக்க கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது, இன்னும் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...