டிச.,15-ம் தேதி சேலம் கோட்டம் ஓய்வூதியர் குறைதீர்ப்பு நாள்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள், வரும் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு சேலம் கோட்ட பழைய கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்க வளாகத்தில்  ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள் நடத்த உள்ளது.  எனவே, ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் இதர பயனாளிகள் தங்களுக்கு ஓய்வூதியம் குறித்து குறைகள் ஏதும் இருப்பின், அவற்றை கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம் கோட்டம், தெற்கு ரயில்வே, சேலம் 636005, என்ற முகவரிக்கு 31.10.2017க்குள்  முன்னதாகவே கடிதம் அனுப்பி தெரிவிக்கலாம். 

இந்த ஓய்வூதிய குறை தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறைகள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான குறைகள், கருணை அடிப்படையிலான பணி வழங்குதல் சம்பந்தமான குறைகள், வாரிசு சான்றிதழ் மற்றும் காப்பாளர் தொடர்பான குறைகள், மற்றும் விதிகள் சம்பந்தப்பட்ட குறைகள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.  மேலும், ஏற்கனவே நடைபெற்ற ஓய்வூதியர் குறைதீர்ப்பு மன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டு திருப்திகரமாக பதிலளிக்கப்பட்ட குறைகளும் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...