முதியவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அருகே முதியவரை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ஆர்.எஸ். புரத்தை அடுத்த பொம்ம நாயக்கன் வீதியில் வசிப்பவர் நடேசன். இவரது தந்தை ராமமூர்த்தி (62). இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் இருதயராஜா, பழனியம்மாள் (36) என்ற தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கடந்த 2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனியம்மாளிடம், ராமமூர்த்தி வீட்டை காலி செய்யுமாறு கூறினார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், கோபமடைந்த பழனியம்மாள், ராமமூர்த்தியை கீழே தள்ளினார். இதில், தடுமாறிய அவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராமமூர்த்தி உயிரிழந்தார்.  

இது தொடர்பாக, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு இன்று (அக்.,25) கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பழனியம்மாளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...