நண்பர்களுக்குள் பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை : கொலையாளிகளை கைது செய்ய சகமாணவர்கள் கோரிக்கை

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன்-தாரா தம்பதியினர். இவர்களது மகன்கள் ரஞ்சித்குமார் (22), அரவிந்த். ரஞ்சித் குமார் கோவைப்புதூர் பகுதியில் உள்ள நண்பர்கள் அறையில் தங்கி தொலைதூர கல்வி மூலம் பிபிஏ படித்து வந்தார். 

இந்த நிலையில், இவரது நண்பரான சென்னையைச் சேர்ந்த அபுபக்கர் என்பவரது தங்க சங்கிலி காணாமல் போனது. இதில் ரஞ்சித் குமார் மீது சந்தேகம் கொண்ட அபுபக்கர், கடந்த 12ம் தேதி நள்ளிரவு தனது நண்பர்களான ஆதித்யா, தர்வேஷ், அசார், சபீக் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள்  உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு ரஞ்சித்குமாரை தாக்கினர். இதில் ரஞ்சித் குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.



இந்த தாக்குதலில் இருந்து தப்பி வீட்டிற்கு ஓடி வந்த ரஞ்சித்குமார் வீட்டில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூற, உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், கடந்த 14ம் தேதியன்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சித் குமாருக்கு நேற்று (புத்தனன்று) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 



இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனிடையே, முதற்கட்டமாக தாக்குதலில் தொடர்புடைய ஆதித்யா-வை மதுக்கரை போலீசார் கைது செய்திருந்தனர். 



தற்போது மாணவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து, ரஞ்சித்குமாரின் உயிரிழப்பு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டுள்ளனர்.

இதனால் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்போது பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...