ஆக்கிரமிக்கும் போஸ்டர்கள்


லாலிரோடு சந்திப்பில் கோவை காவல் துறையால் அமைக்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் சேவை எண் விழிப்புணர்வு பேனரை தனியார் விளம்பர போஸ்ட்டர்கள் ஆக்கிரமித்துள்ளன.



பொதுமக்களின் குறைகளை விரைவாகவும் எளிதாகவும் பெறுவதற்கு வசதியாக, 2016ஆம் வருடம் கோவை காவல் துறையால் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பொதுமக்கள் தங்களின் குறைகளையும் புகார்களையும், புகைப்படங்களாகவும் காட்சிகளாகவும் பதிவு செய்து காவல்துறைக்கு நேரடியாக அனுப்பி வருகின்றனர். காவல்துறையினரும் உடனடியாக இந்த புகார்களை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். 

இந்த சேவையை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நகரின் முக்கிய சந்திப்புகளில் வாட்ஸ் ஆப் சேவை எண் அடங்கிய பேனர்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. சந்திப்புகளில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், சாலையை கடக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் காவல்துறையினரின் வாட்ஸ் ஆப் சேவை எண்ணை குறித்துக்கொண்டு தங்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், காவல்துறையின் வாட்ஸ் ஆப் சேவை பற்றிய பேனர்கள் தொடர்ந்து தனியார் போஸ்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காவல்துறையை தொடர்புகொள்வதற்கான 24 மணி நேர சேவை எண்ணையே மறைத்தவாறு விளம்பர போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டுவதால் பொதுமக்களிடம் இந்த சேவையைக் கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...