அடுத்த ஆண்டு முதல் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு - அனைத்து ஆட்டோ தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு


கோவை, அக்டோபர் 28: வரும் ஜனவரி மாதம் முதல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எல்.பி.எப், ஏ.டி.பி  உள்ளிட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தின் போது, வரும் ஜனவரி முதல் கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணமாக 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், அடுத்த ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.15 வீதம்  கட்டணம் வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பான கட்டண பட்டியலையும் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வெளியிட்டனர். 



இந்த புதிய கட்டணத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் ஜனவரி முதல் இந்த புதிய கட்டணத்தின்படி ஆட்டோ கட்டணம் வசூல் செய்வது என முடிவு செய்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தனியார் நிறுவனங்களின் வரவால் ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், டிசம்பர் 17-ம் தேதி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் மீண்டும் கூட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...