போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க அதிரடி தடை

அக்டோபர் 30: தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கோவை நுகர்வோர் மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. அதில், போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதால், அது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகிறது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விளம்பர பேனர்கள் வைப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அதைவிடுத்து, சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்கிறார்கள். இதனால், பொதுமக்களின் நலன் கருதி, சிக்னல்களில் இனி விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், வழக்கை இன்று (அக்.,30) விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டனர். மேலும், இதுவரை வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களின் காலம் முடிவடைந்த பிறகு, அதனை மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இனிமேல் யாரும் சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது எனத் தெரிவித்தனர். இவ்வழக்கில், முன்னர் வாய்மொழியாக அறிவுறுத்தியிருந்த நீதிமன்றம், தற்போது விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, திருலோச்சண குமாரி என்பவர் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மையான சுற்றுப்புறத்தைப் பேணும் விதமாக குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் தேவையற்ற படங்களை வரைதலைத் தடுக்க வேண்டும். உயிரோடு இருக்கும் நபர்களுக்கு கட் அவுட், பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், தற்போது போக்குவரத்து சிக்னலிலும் விளம்பர பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...