பெட்டி கடை அமைக்க காவல் துறை ஆய்வாளர் பணம் கேட்பதாக பார்வையற்ற இளைஞர் ஆட்சியரிடம் புகார்


அக்டோபர் 30: உக்கடம் பேருந்து நிலையத்தில் பெட்டி கடை அமைக்க காவல் துறை ஆய்வாளர் பணம் கேட்பதாக பாதிக்கப்பட்ட பார்வையற்ற இளைஞர் பத்ரன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரன். இவருக்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் பெட்டி கடை வைக்க அனுமதி வழங்கிய மாநகராட்சி நிர்வாகம், மாற்றுத் திறனாளிகள் உதவி தொகையின் கீழ் கடை வைக்க 30 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, கடை அமைக்க உக்கடம் காவல் நிலையத்தில் தடையின்மை சான்று கேட்டு தொடந்து பல முறை அவர் மனு அளித்தும் காவல் துறையினர் அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று பத்ரன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் தன்னிடம் தடையின்மை சான்று வழங்க பணம் கேட்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உக்கடம் பேருந்து நிலையத்தில் கடை அமைக்க அனுமதி பெற்றுத்தருவதுடன், சம்மந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...