கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி மனு

கோவை, அக்டோபர் 30-  கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக் கோரியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலனை விடுதலை செய்யக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சுற்றுசூழல் ஆர்வலர்களுடன் மாவட்ட அட்சியரிடம் மனு அளித்தனர்.



இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

"சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி படுகையில் மணல் கடத்தல், கூடங்குளம் அணு உலை, கனிமவளங்கள் கடத்தல், இதர ஆறுகளில் மணல் கொள்ளை போன்ற செயல்களுக்கு எதிராக போராடி வரும் அவரை சட்டவிரோத செயல்களை செய்பவர்களுக்கு ஆதரவாக காவல் துறை கைது செய்துள்ளது. உடனடியாக முகிலனை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கூடங்குளத்தில் போராடியதற்காக பொதுமக்கள் மீது பதியப்பட்ட 132 வழக்குகளையும் திரும்பப் பெற நீதிமன்றம் அறிவுறுத்தியும் இது வரை வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. வழக்குகளை திரும்பப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...