விமான நிலைய விரிவாக்கத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எஸ்.ஐ.இ.எம்.ஏ நன்றி

கோவை, அக்டோபர் 30: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசுக்கு தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அதன் தலைவர் திரு.கே.கே. ராஜன் செய்தியாளர்களிடம் இன்றுபேசுகையில், கோவை மாநகரின் நீண்ட நாள் தேவையான விமானநிலைய விரிவாக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவு பெறாத நிலையில் இருந்து வந்தது. இது குறித்து சீமா மற்ற சகோதர சங்கங்களுடன் இணைந்து பலமுறை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் அனுப்பியுள்ளது..மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இது பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளோம். 

தற்போது, கோவை மக்கள் மகிழ்ச்சியுறும் வண்ணம், விமானநிலைய விரிவாக்கத்திற்கு மாநில அரசு விரைவு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

கடந்த வாரம் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், கோவை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்து அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் விவாதித்து விரிவாக்கத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கைகளை எடுத்து வரும் முதலமைச்சருக்கு சீமா சங்கத்தின் சார்பாகவும், கோவை மக்கள் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

முதலமைச்சரின் ஆலோசனையினைத் தொடர்ந்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தேவைப்படும் நிலங்களைக் கையகப்படுத்த ஒரு உயர்நிலை குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். 

விமானநிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், தற்போது, செயல்பட்டு வரும் விமானங்களைவிட கூடுதலாக பல விமான சேவை பல ஊர்களுக்கு குறிப்பாக வெளிநாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். இதனால், வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் வியாபார நோக்கில் கோவைக்கு நேரடியாக வந்து செல்ல ஏதுவாக இருக்கும். இதனால், கோவையின் பொருளாதாரம் உயரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

மேலும், மேலும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் முடிவுற்று கோவை விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக உருவெடுக்க வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...