நண்பரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை

கோவை, அக்டோபர் 30:  கடந்த 2013-ம் ஆண்டு நண்பனைக் கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார். 

கூடலூரைச் சேர்ந்த வஹிதா பானு என்பவர் கணவர் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கத்தால் அடிமையான தனது கணவருடன் வாழ பிடிக்காத பானுவுக்கு, எதிர் வீட்டைச் சேர்ந்த மதிவாணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அப்போது, கோவையில் ஏதாவது நிறுவனத்தில் தனக்கு வேலை வாங்கித் தருமாறு பானு, மதிவாணனிடம் கேட்டுள்ளார். அதன்பேரில், இருவரும் கோவைக்கு வந்துள்ளனர். 

கோவையில் துணிக்கடையில் பானுவுக்கு வேலைகிடைத்தது. அப்போது, சாய்பாபா காலனி, கே.கே.புதூரைச் சேர்ந்த சதீஷ் (30) என்ற தனது நண்பனை மதிவாணன் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதனிடையே, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறால், பானுவுடனான தொடர்பை மதிவாணன் சிறிது காலம் துண்டித்திருந்தார். பின்னர், சுமார் 6 மாதத்திற்கு பிறகு, உறவைப் புதுப்பிப்பதற்காக அலைபேசியில் பானுவை மதிவாணன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தனக்கும், சதீஷிக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாக பானு கூறியுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த மதிவாணன், சதீஷை கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, கண்ணில் மிளகாய் பொடித்தூவி, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மதுக்கரை போலீஸார், மதிவாணனை கைது செய்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.10 ஆயிரம் அபராதமும்,  அதனைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாத காலம் சிறைதண்டனை விதிக்கப்படும் என அவர் ஆணையிட்டார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...