காந்திபுரம் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக நாளை திறப்பு - முதலமைச்சர் நேரில் வந்து திறந்து வைக்கிறார்

கோவை, அக்டோபர் 31: கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்ட இரண்டடுக்கு மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (நவ., 1) திறந்து வைக்கின்றார். 



கடந்த 2010-ம் ஆண்டு செம்மொழி மாநாடு நடைபெற்ற போது காந்திபுரத்தில் மூன்றடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஆட்சி அமைந்ததால், மூன்றடுக்கு மேம்பாலம் என்பதை இரண்டடுக்கு மேம்பாலம் எனத் திட்டம் மாற்றப்பட்டு, கட்டுமான பணிகள் கடந்த 2014ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வந்தது. சுமார், ரூ.195 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. 

காந்திபுரம் பார்கேட் பகுதியில் இருந்து லட்சுமிபுரம் வரையிலான 1,752 மீட்டர் தூரம் வரையிலான பாலக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. 54 தூண்களுடன் 16.6 மீ., அகலத்துடன், நான்கு வழித்தடமாகப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுமான பணி நிறைவடைந்து,வர்ணம் பூசப்பட்டுள்ளது. மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு விட்டன. 



இந்த நிலையில், நாளை (நவ., 1) மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார். 

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இன்று நடைபெற்று வருகின்றது. பாலம் முழுவதும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...