வால்பாறையில் 20 சதவிகிதம் போனஸ் வழங்கக் கோரி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை, நவம்பர் 1: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை அடுத்துள்ள சோலையார் பகுதியில் ஜெய்ஸ்ரீ தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமாக நான்கு எஸ்டேட்டுகள் உள்ளது. இதில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தினால் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 தினங்களுக்கு முன்பாகவே வழங்கப்படுவது வழக்கம்.



இந்த நிலையில் நடப்பாண்டுக்கான போனஸ் 8.33 சதவிகிதமாக குறைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் போனஸ் தொகையினை வாங்க மறுத்து 20 சதவிகிதம் போனஸ் வேண்டும் என்று கடந்த அக்டோபர் 7-ம் தேதியன்று தொழிற்சாலை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தொடர் போராட்டம் நடத்தி வந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கேசவ முருகன், ஐஎன்டியுசி பிரபாகரன் மற்றும் சிஐடியு கம்யூனிஸ்ட் கட்சி ராஜன் ஆகிய தொழிற்சங்கங்களுடன் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் கடந்த 27ம் தேதி கோவையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் தொழிற்சங்கத்தினர் 20 சதவிகிதம் போனஸை எஸ்டேட் நிர்வாகம் வழங்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தனர். 

இதனைத்தொடர்ந்து, மேற்கண்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து இன்று 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...