செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முழுமையாக இணைந்த மலைவாழ் கிராமங்கள்

கோவை, நவம்பர் 1 : கோவை மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்தனர். 

பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட செல்வமகள் சேமிப்புதிட்டம் 10 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு மட்டுமே உரிய திட்டமாகும். அதிக வட்டிவிகிதம் கொண்ட இந்தத் திட்டம் மக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது. மலைவாழ் மக்களிடம் அஞ்சல்துறையின் நலதிட்டங்கள் சென்றடையும் வகையில்,  பாலமலை பகுதியில் அமைந்துள்ள மாங்குலி பசுமணி, பசுமணிப்புதூர், பெரும்பதி, பெருக்குபதி, குஞ்சூர்பதி, ராயரூத்துபதி ஆகிய மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு செல்வமகள்  சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டது.

இதற்காக, கடந்த மாதம் 10-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குப் புத்தகங்களை வழங்கினார். விழாவில் பிறந்து 9 மாதங்களே ஆன குழந்தைகளுக்குக் கூட கணக்கு தொடங்கப்பட்டது சிறப்பு அம்சமாகும்.

தொடர்ந்து, விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி பேசுகையில், அஞ்சல்துறையின் மகத்தான சேவைகள் இன்னும் தொடர வேண்டும். அதற்கு முழு ஒத்துமழைப்பு அளிக்கப்படும். இவ்வாறு கூறினார். 

இறுதியில், மலைவாழ் மக்களுக்கு கணக்கு துவங்க உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...