சாலைகளில் குவியும் மணலால் கோவையில் வாகன ஓட்டிகள் அவதி


கோவை, நவம்பர் 1: கோவை - மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் என்.எச்.67 சாலையானது 36 கி.மீ தூரம் கொண்டது. மலைகளின் ராணி என்றழைக்கப்படும் உதகைக்கு செல்லும் ஒரே வழியான இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். நாள்தோறும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்கின்றன. 

மேலும், மேட்டுப்பாளையம் மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களது பணிக்காக, இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் கோவை நகரின் மத்தியப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் மணல்களினால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருக்கும் போது, காற்று வேகமாக வீசுவதால், அவர்களது  கண்களில் மணல் துகள்கள் விழுந்து, விபத்துகளும் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றன. 

இதேபோல,  அவினாசி சாலையில் (என்.எச்.67) வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளும் இதே இன்னல்களை எதிர்கொள்கின்றனர். 

இது தொடர்பாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் கார்த்திக் என்பவர் கூறுகையில், நான் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் போதும், மணல் துகள்கள் தன் முகம் மீது விழுகிறது. காரணம், சாலையின் ஓரங்களில் மணல்கள் குவிந்து கிடப்பதே ஆகும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக சாலையில் கிடக்கும் மணல்துகள்களை துப்புறவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்துவதை பார்த்துள்ளேன். ஆனால், தற்போது, அந்தப் பணிகளை காணமுடிவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

இதனிடையே, மேட்டுப்பாளையம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப்பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால், விரிவாக்கப் பணிகளால் சாலைகளில் உருவாகும், மணல் திட்டுக்களால் கடும் அவதிக்குள்ளாவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். 

இது தொடர்பாக தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த பொதுமருத்துவர் மதிவாணன் பேசுகையில், நமது, நவீன வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர்களுக்கு தூசுகளால் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சாலைகளில் கிடக்கும் மணல்களினால், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள், முகத்தில் முகமூடி அணிந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...