நொய்யல் மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு மருத்துவ ஆதரவு சேவையை வழங்கிய ஆர்த்தோ-ஒன்

கோவை, நவம்பர் 2 : கோவையில் நடைபெற்ற நொய்யல் அரை மாரத்தான் நிகழ்வில் பங்கேற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஆர்த்தோ-ஒன் மருத்துவ ஆதரவு சேவையை வழங்கியது. 

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளை, குறிப்பாக நொய்யல் ஆற்றை மாசில்லாமல் பாதுகாப்பது மீது விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இந்த மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதில், 1000-க்கும் மேற்பட்டோர் அதிக உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். 

விளையாட்டு ஆர்வலர்களுக்கு மிக நவீன மருத்துவ கவனிப்பு சேவையையும், சிகிச்சையையும் வழங்குவதில் பிரபலமாக அறியப்படும் ஆர்த்தோ-ஒன், இதில் பங்கேற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஓட்டப்பந்தய வழித்தடத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு முதலுதவியையும், சிகிச்சையையும் வழங்கியதுடன் மாரத்தான் நிகழ்வுக்கு முந்தைய தயாராகுதல் மற்றும் நிகழ்வுக்கு பிந்தைய தளர்வாக்கல் ஆலோசனை சேவையையும் வழங்கியது. 

இந்நிகழ்ச்சியின் போது ஆர்த்தோ-ஒன் நிறுவனர் டாக்டர். டேவிட் ஏ. ராஜன் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் வாக்கத்தான் மற்றும் மாரத்தான் போன்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பையும், பங்கேற்பையும் பெற்று வருகின்றன. ஒரு சிறந்த நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த மாரத்தான் நிகழ்வில் பங்கேற்க ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் வந்திருப்பதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த நபர்கள் இந்நிகழ்வில் அதிக உற்சாகத்தோடு பங்கேற்றிருக்கின்றனர். இவர்கள் வெளிப்படுத்திய விளையாட்டின் மீதான ஆர்வமும், தாக்கமும் பெரிதும் பாராட்டுக்குரியது," 

மேலும், இந்த மாரத்தான் நிகழ்வில் ஒரு அங்கமாக பங்கேற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இத்தகைய நிகழ்வுகளின் பங்கேற்பாளர்கள் சிரமமில்லாமல் இலக்கைச் சென்றடைவதற்கு நாங்கள் உதவ முடியும் என்பதால் இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகளில் எமது சேவையை வழங்குவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம். என்றார். 

ஆர்த்தோ-ஒன் குறித்து: டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தால் ஆர்த்தோ பெட்டிக்ஸ் (எலும்பு முடநீக்கவியல்) சிறப்புத்துறையின் கீழ் அகில இந்திய லைஃப் ஸ்டைல் மருத்துவமனை மற்றும் கிளினிக் தரவரிசை சர்வே நடத்தப்பட்டது. அதில், 2017-ல் தென்னிந்தியாவிலுள்ள முதன்மையான 10 மருத்துவமனைகளுள் ஒன்றாக ஆர்த்தோ-ஒன் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...