உடையும் தருவாயில் முத்தண்ணன் குளம்

கோவை, நவம்பர் 3: கோவையில் அமைந்துள்ள முத்தண்ணன் குளம் தற்போது உடையும் தருவாயில் உள்ளதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முத்தண்ணன் குளம் என்றழைக்கப்படும் குமாரசாமி குளம் தடாகம் சாலை காந்திபார்க் அருகே அமைந்துள்ளது. சுமார் 190 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்தக் குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியாக கிருஷ்ணம்பதி, கோளரம்பதி, நரசம்பதி உள்ளிட்ட குளங்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது முத்தண்ணன் குளத்தின் கரையோரப் பகுதியில் தடுப்புகள் சிதிலமடைந்து வருகிறது.



இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்தின் அருகாமையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக குளக்கரையின் நிலை மோசமடைந்துவிட்டது. அதனைத்தொடர்ந்து, உடனடியாக வேலைகள் நிறுத்தப்பட்டு மணல் மூட்டைகளைக் கொண்டு குளக்கரைப் பகுதி தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது என்றனர்.



இந்தக் குளத்தின் அருகில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் குளத்தில் இருந்து நீர் வெளியேறினால் ஒட்டுமொத்த குடியிருப்பும் பாதிக்கும். மேலும், சாலைகளும் முற்றிலும் பாதிப்படையும். 

மேலும், கோவையில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் நீர் வரத்து அதிகரித்து குளம் உடையும் பட்சத்தில் சென்னையில் ஏற்பட்டதைப் போன்றே இங்கேயும் பெரிய ஆபத்து ஏற்படும்.



"அருகிலுள்ள கட்டுமானப் பணிகளை தொடர்ந்தால் முத்தண்ணன் குளத்தின் கரைப் பகுதி மோசமாகிவிடும். இதனால் பேரழிவினை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும்" என்கிறார் அப்பகுதியில் வசித்து வரும் ஒருவர்.



இதனிடையே, நிலைமைகளை மதிப்பிடுவதற்காகக் கோவை மாநகராட்சி அதிகாரிகள் குளக்கரையினை பரிசோதித்து வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சியின் மூத்த அதிகாரி கூறுகையில், முத்தண்ணன் குளத்தில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படும். அதன் முதற்கட்டமாக மணல் மூட்டைகளைக் கொண்டு தற்காலிக தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...