டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி

கோவை, நவம்பர்.3: கோவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தில்  கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் இன்று காலை குழந்தை பலியாகியுள்ளது. 

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. தையற்கலைஞரான இவருக்கு ரய்யான் (2) என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்தது. இந்த நிலையில், அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குழந்தையின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதை தொடர்ந்து கடந்த 1-ம் தேதி அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  டெங்குவுக்காக உள்ள தனி வார்டில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை குழந்தை ரய்யான் பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...