சேற்றில் சிக்கிய காட்டு யானையை மீட்க போராட்டம்

கோவை, நவம்பர் 4: கோவை தடாகம் பகுதியில் உள்ள தடுப்பணை அருகே உள்ள சேற்றில் சிக்கிய காட்டு யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட வீரபாண்டி குட்டை தடுப்பணை அருகே சேறும் சகதியான இடத்தில் ஒற்றை காட்டுயானை நீண்ட நேரமாக நின்று கொண்டே இருக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள், இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், வனத்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்கும் குழுவினர் விரைந்து வந்து யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இது தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், 15 முதல் 20 வயது மதிக்கத்தக்க யானை தடுப்பணையில் நீர் குடிக்க வந்ததாகவும், அந்த யானையுடன் ஒரு குட்டி யானையும் வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

நீண்ட நேரமாக யானை சகதியில் சிக்கி நின்று கொண்டிருப்பதால், அதனைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...