மேம்பாலப் பணிகளை துரிதமாக முடிக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் - தே.மு.தி.க.

கோவை, நவம்பர் 4: கோவையில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தே.மு.தி.க.வினர் தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பீளமேடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் தாமதமாவதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகக் கோவை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கோவை ரயில்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பேசிய அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில், "எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் மூடப்பட்ட அரசு மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் அவ்வழியே செல்லும் கல்லூரி, பள்ளி மாணவிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தாமதமாகும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி தமிழக அரசுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்", என்றார்.



இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தே.மு.தி.க.வினரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாகக் கோவை ரயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...