கோவையில் 3 பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் அதிகம் - கோவை அரசு மருத்துவமனையின் தலைவர் தகவல்

கோவை, நவம்பர் 4: கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டெங்குக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகக் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் காய்ச்சல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கோவை அரசு மருத்துவமனை உயர்தர சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில், சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். பி.அசோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணக்கிடும் போது, அதிகளவு நோயாளிகள் சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட அண்டை மாவட்டத்தினருக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், 50 சதவீதத்தினர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்.

டெங்கு காய்ச்சலானது, ஆரம்ப நிலையைக் கண்டறிந்து, மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் விரைவில் குணப்படுத்த முடியும். நோய் முற்றினால்,சிகிச்சை அளிப்பது கடினமானது. சுற்றுப்புறம் மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டத்தில் டெங்கு ஒழிக்கும் பணியில் ஈடுபடும் மாநகராட்சி, சுகாதாரமற்ற பகுதிகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகிறது. தற்போது, டெங்கு அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் குறிப்பிட்டுள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் மாநகராட்சி டெங்குத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...