கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவை, நவம்பர் 4:  கோவையில் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விநியோகித்து செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிதிரிந்தார். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்தனர்.

அப்போது அந்த வாலிபர் கஞ்சா விற்பனை செய்பவர் என்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைத்த பொதுமக்கள் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். அதோடு அவரை துடியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தாஜ்மலூஷன் என்பரது மகன் நீகல்(20) என்பதும். கல்லூரிகள் இருக்கும் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நீகல்-ஐ கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த சூழலில், வாலிபரை பொதுமக்கள் தாக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இதில் அந்த வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...