லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்


கோவை, நவம்பர்.5:  கோவையில் லஞ்சம் வாங்கிய மூன்று போலீசாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு துணை ஆய்வாளராக பணிபுரிபவர் சின்னராஜ். இவருடன் தலைமை ஏட்டு கனகராஜ் மற்றும் டிரைவர் சீனிவாசன் ஆகியோர் கடந்த 2-ம் தேதி இரவு கள்ளப்பாளையம் பிரிவு அருகே வாகனதணிக்கை நடத்தினர். அப்போது அவ்வழியாக கால்நடைகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி லஞ்சம் பெற்றனர். 

இவர்கள் லஞ்சம் வாங்குவதை அவ்வழியாக சென்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். மூர்த்தி பார்த்தார். உடனடியாக மூவரிடமும் விசாரித்ததில் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, லஞ்சப்புகாரில் சிக்கிய மூன்று போலீசாரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார்.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து லஞ்சப்புகாரில் சிக்கிய மூன்று போலீசாரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...