இந்த வாரம் முதல் உயர்கல்வி குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்கள் சிம்ப்ளிசிட்டியில்..

கோவை, நவம்பர் 6: கோவையில் நடக்கும் பல்வேறு முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கி வரும் சிம்ப்ளிசிட்டி செயலியில், தற்போது,  உயர்கல்வி தொடர்பான செய்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது . இதற்கென ”EduCity” என்ற தனி பத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அதில்,  வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் உயர்கல்வி தொடர்பான செய்திகளை  தலைமையாசிரியர் மற்றும்  தலைமை நிரூபர் அமுதா கண்ணன் வழங்க இருக்கிறார்.   

கோவையின் பிரபல ஹிந்து நாளிதழின் முன்னாள் நிரூபராக பணியாற்றிய அவர், உயர்கல்விக் குறித்த தகவல்களை பல ஆண்டுகளாக வழங்கி வந்தார். தமிழகத்தில் உயர்கல்விக்கு பெயர்போன கோவையில், 7 பல்கலைக்கழகங்களும், ஏராளமான கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன  .  இதனால், உயர்கல்வியைப் பயில்வதற்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், ஏராளமானோர் கோவைக்கு வருகின்றனர். 

இந்த நிலையில், இம்மாதம் 13ம்  தேதி முதல்    நமது சிம்ப்ளிசிட்டி செயலியில்,  கல்வி நிறுவனங்கள் பற்றியும், அவற்றின் கொள்கைகள் குறித்தும் விரிவாக பதிவிடப்பட இருக்கிறது. இந்த நடவடிக்கை மாணவர்களுக்கும், கல்வி குறித்த நெறியாளர்களுக்கும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...